சனி, 22 செப்டம்பர், 2012

குர்ஆன் பக்கங்களை எரித்த கிரிஸ்தவ சிறுமி சிறையில்

இமாம் ஒருவரும் கைது

புனித குர்ஆனின் பக்கங்களை எரித்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சிறுமி தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் இமாம் ஒருவர் கைதுசெயப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வசிக்கும் ரிம்ஷா மசி (வயது 11) என்ற சிறுமி புனித குர்ஆனின் பக்கங்களை எரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சமீபத்தில் கைது செயப்பட்டாள். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மெஹ்ரியா ஜாஃபரில் உள்ள ஜாமாயா அமினியா மசூதியின் இமாம் காலித் சிஸ்டியை பொலிஸார் கைது செதனர்.

ஹபீஸ் முஹம்மது ஜுபைர் என்பவர் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த சாட்சியத்தின் பேரில் இமாமை கைது செததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

இமாம் சிஸ்டி ரிம்ஷாவின் பையில் குர்ஆன் நூலின் சில பக்கங்களை  வேண்டுமென்றே போட்டதாக ஹபீஸ் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

இதை அப்போதே  பார்த்த ஹபீஸ் ஏன் இப்படிச் செகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கிறிஸ்தவ மதத்தினரை இந்தப் பகுதியிலிருந்து விரட்டுவதற்காக இப்படிச் செவதாக இமாம் கூறியதாக ஹபீஸ் கூறியுள்ளார்.

கைது செயப்பட்டுள்ள இமாமுக்கு குர்ஆன் அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll