சனி, 22 செப்டம்பர், 2012

எகிப்து தொலைக்காட்சியில் ஹிஜாபுக்கு பச்சைக்கொடி

எகிப்து அரச தொலைக்காட்சிகளில் தலையை முழுமையாக மறைக்கும் ஹிஜாபுக்கு இருந்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்து வந்த தடையானது நீக்கப்படுவதை உறுதி செயும் விதமாக ஹிஜாப் அணிந்த நிலையில் பாத்திமா நாபில் என்பவர் முதன் முதலாக அந்நாட்டு அரச செதித் தொலைக்காட்சியான செனல் - 1 இல் செதி வாசிப்பது ஒளிபரப்பப்பட்டது. 

ஹுஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் எகிப்தில் இஸ்லாம் தொடர்பில் அதிக அக்கறை காட்டப்பட்டு வரும் நிலையிலேயே மேற்படி மாற்றமும் நிகழ்ந்துள்ளது. 
முன்னதாக கடந்த ரமழான் மாதம் பெண்கள் மட்டும் கடமையாற்றும் இஸ்லாமிய தனியார் தொலைக்காட்சியொன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டமையும் அது அங்கு அமோக வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

2002ஆம் ஆண்டு சப்வாத் அல் ஷரீப் ஊடக அமைச்சராக இருந்த போது அரச தொலைக்காட்சியில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில் ஹிஜாப் அணிந்து செதி வாசித்து புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்த பாத்திமா நாபில் அரபு வசந்தம் தற்போது தொலைக்காட்சியையும் வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll