சனி, 22 செப்டம்பர், 2012

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் ஆட்சியமைத்து விடும் என்று அரசுக்கு அச்சம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பெரும் பீதியில் உள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியமைத்து விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குச்சவெளி, குறிஞ்சாங்கேணி, முகம்மதியா விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம்  மேற்கண்டவாறு கூறினார். 

தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில், 
முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலம் பொருந்திய கட்சிகள் என்பதனை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்திற்கு தெரிவிக்கப் போகிறது. இதன் மூலம் சர்வதேசத்தின் அனுசரணையுடன் எமது நீண்டகால அபிலாஷைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான சூழல் உருவாகலாம். 

எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னொரு சின்னத்தில் ஏறி சவாரி செயும் நிலை ஏற்படாது. எமது கட்சியின் ஆதரவின்றி யாரும் தனித்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைக்க முடியாது. பேரம் பேசும் விடயத்தில் எமது பலத்தைக் காட்டுவதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களிக்க வேண்டும் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll