சனி, 22 செப்டம்பர், 2012
புஷ், பிளேயருக்கு எதிராக விசாரணை நடத்துக
வலியுறுத்துகிறார் டெஸ்மன் டுடு
ஈராக் மீது தக்க காரணங்களின்றி தாக்குதல் மேற்கொண்டமைக்காக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோருக்கு எதிராக நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றில் விசாரணைகள் அவசியம் என சமாதானத்துக்கான நோபல் பரிசினை வென்ற டெஸ்மன் டுடு தெரிவித்தார்.
பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிரபல ஒப்சேவர் நாளிதழுக்கு வழங்கியுள்ள விஷேட செவ்வியிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். குறித்த செவ்வியில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஈராக்கில் ஆக்கிரமிப்பொன்றை நிகழ்த்தும் நோக்கிலேயே இவர்கள் பொக் காரணங்களைக் கூறி யுத்தமொன்றை ஆரம்பித்தனர். இதனால் ஈராக்கில் பாரிய உயிர்ச் தேசங்கள் நிகழ்ந்ததோடு சர்வதேச ரீதியில் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்பட்டது.
இக்கால கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி போன்று வரலாற்றில் ஒரு போதும் ஏற்படவில்லை.
பாரிய அழிவை ஏற்படுத்தவல்ல இரசாயன ஆயுதங்களை சதாம் ஹுசைன் வைத்திருப்பதாக புஷ்ஷும் உலகின் நன்மைக்காக அவர் (சதாம்) பதவியிறக்கப்பட வேண்டுமென டொனி பிளேயரும் ஈராக் மீதான போருக்கு நியாயம் தேடியதாகவும் இதனால் அவ்விருவரையும் தவிர வேறு எவரும் நன்மையடையவில்லை எனவும் டெஸ்மன் டுடு குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக