சனி, 17 நவம்பர், 2012

மடிக் கணனியினால் உயிர் அணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுததுமா?


லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கும் அதிக நேரம் அடுப்படியில் நிற்கும் ஆண்களுக்கும் உயிரணு பாதிக்கும் என மருத்துவ ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஷாஷயரை சேர்ந்தவர் ஸ்காட்லீட் வயது 30 இவரது மனைவி லாரா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் நீண்ட நாட்கள் கடந்த பிறகும் லாரா கர்ப்பம் தரிக்கவில்லை. எனவே இருவரும் மருத்துவ ஆய்வு மேற்கொண்டனர். அதில் லாராவுக்கு எந்த குறையும் இல்லை என்பது தெரிய வந்தது.

ஸ்காட்லீட்டுக்கு தான் குறை இருந்தது. அவருடைய உயிரணுவின் வால் பகுதி தலை பகுதியை சுற்றியபடி இருந்தது. இதனால் அந்த உயிரணுவால் நீந்தி சென்று கரு முட்டைக்குள் செல்ல முடியவில்லை. இதனால் தான் கருத்தரிக்கவில்லை என்று தெரிய வந்தது. ஏன் இப்படி ஆனது? என்று டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.
அவருடைய அன்றாட பழக்க வழக்கங்களை கேட்டனர். அதில் அவர் தினமும் 2 மணி நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரை தன்மடியில் வைத்து பயன்படுத்துவது தெரிந்தது. அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் தான் உயிரணு பாதிப்பு ஏற்பட்டது. தெரிய வந்தது.அதிக நேரம் அடுப்படியில் நின்று சமையல் செய்யும் ஆண்களுக்கும் இதேபோன்ற பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll