சனி, 22 செப்டம்பர், 2012

அரசுடனும் கூட்டமைப்புடனும் ஹக்கீம் இன்று பேச்சுவார்த்தை

இரு தரப்பினதும் உத்தரவாதங்களை பரிசீலித்த பின்னரே இறுதி முடிவு

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எட்டுவதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக பல மணி நேரம் கட்சியின் பாராளுமன்றக் குழுவும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இருப்பினும் ஆட்சியமைப்பதற்கான அழைப்பை விடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் இரு தரப்புகளும் வழங்கும் உத்தரவாதங்களை பரிசீலித்த பின்னரே இறுதி முடிவை எட்டுவது எனவும் நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலிலும் நேற்று அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  வாசஸ்தலத்திலும்   இரு வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. 

இக் கூட்டங்கள் பல மணித்தியாலங்களாக  நீடித்தபோதிலும் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. கட்சியின் தீர்மானத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் பெருந்திரளான ஆதரவாளர்கள் நேற்று ஹக்கீமின் வாசஸ்தலத்தின் முன்னால் குழுமியிருந்தனர். 

மாகாணசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மு.கா. யாருடன் இணைந்து ஆட்சியமைக்கும் என்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

மு. காங்கிரஸ் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தை கட்சி எடுத்தபோதும் தேர்தலுக்குப் பின்னர் அரசை ஆதரிப்பது  தொடர்பில் முஸ்லிம்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கிழக்கில் ஆட்சியமைப்பதனையே அங்குள்ள முஸ்லிம்களும் ஏனையவர்களும் விரும்புகின்றனர்.

கிழக்கில் அரசுக்கெதிராக 400,000 வாக்குகள் உள்ளன. 200,000 வாக்குகளே அரசுக்கு அங்கு உள்ளது. இந்நிலையில் மு.கா. மக்கள் விருப்பை நிாரகரித்து வரலாற்றுத் துரோகம் ஒன்றை செயக்கூடாது.

கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவினை பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம் முதலமைச்சர் உள்ளிட்டவற்றை தருவதற்கு த.தே.கூ. தயாராகவுள்ள நிலையில் அச்சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக்கூடாது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்துக்காகவே தலைவர் அஷ்ரப் காத்திருந்தார்.  இன்று அதற்கான வாப்புக்கள் ஏற்பட்டுள்ளது.  அதனை சரியாக பயன்படுத்தி வாக்களித்த மக்களின் விருப்பத்தினை மு.கா. நிறைவேற்ற வேண்டும்.

எங்கு எத்தனை கூட்டங்களை வைத்து முடிவு எட்டப்பட்டாலும் அது மக்களின் விருப்பத்தினை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll