சனி, 22 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு நோய்! மலத்தை மடியில் சுமக்கும் குழந்தை- மருததுவக் கட்டுரை



எம்.எஸ்.எம். நுஸைர்,
எப்போதும் எமக்கு ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கின்ற போது நாம் அதன் பெறுமதியை பூரணமாக உணர்வதில்லை. ஆனால் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும் போது அல்லது முயற்சி செது அப்பொருளை நாம் பெறும் போது அதனை பேணிப் பாதுகாப்பதில் அதிக கரிசனை  எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட நீரை நாம்  வாங்கினால் அதனை மிகவும் கவனமாகவே பாவிப்போம். வீண் விரயம் செய மாட்டோம். ஆனால் நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கின்ற உயிர் வாயு ஒட்சிசனைப் பற்றி மிகக் குறைவாகவே சிந்திக்கின்றோம். இந்த ஒட்சிசன் எமக்கு எவ்வாறு கிடைக்கிறது. அதன் பெறுமதி என்ன? அது இல்லாவிட்டால் என்ன நடக்கும்? இதனை எமக்கு இலவசமாகக் கொடுத்தது யார்? போன்றவற்றைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அதேபோன்று தான் எமது உடல் பாகங்கள் சரியாக இயங்குகின்ற நாம் சுகதேகியாக இருக்கின்ற நாட்களில் நாம் எமது உடலைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் எமது உடல் மிகச் சிக்கலான கட்டமைப்பில் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உடற்கூறுகள் ஒன்றோடொன்று இணைந்து (இறைவனின் கட்டளைப்படி) மிகச் சரியாக இயங்குகின்றன. பொதுவாக அதிகமான நோகள் மனிதனது முறைகேடான செயற்பாடுகளாலும் தவறான பழக்க வழக்கங்களாலுமே ஏற்படுகின்றன என்பதை யாரும் மறக்க முடியாது.

ஆனால் சிலவேளைகளில் பிறப்பியல் குறைபாடுகள் காரணமாக சிலர் பாரிய நிரந்தர நோகளுக்கு உள்ளாகி விடுகின்றனர். (இது மிக மிகக்  குறைவான எண்ணிக்கையிலேயே ஏற்படுகிறது) என்னைப் பொறுத்த வரையில் மிக அரிதான இந்நோகளை அல்லாஹ் ஏற்படுத்தி விட்டிருப்பது, நாம் இறைவனின் அருளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு வழி முறை என்றே நான் கருதுகிறேன்.

அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் உணவுகள் எவ்வாறு எமக்குப் பயனளிக்கிறது? எமது சமிபாட்டுத் தொகுதியின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றி எம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.

சமிபாட்டுத் தொகுதியின் ஒரு சிறு பகுதி பாதிப்படைந்தாலும் கூட நாம் எவ்வாறான விளைவுகளை சந்திக்க நேரிடும்  என்பதை எடுத்துக் கூறுவதற்காகவே இச் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 க.பொ.த. சாதாரண தரத்தோடு தனது படிப்பினை நிறுத்திக் கொண்ட ஓர் இளைஞன் முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிந்து வந்த போது தனது 22 வயது வயதில் 18 வயதான ஒரு பெண்ணை திருமணம் செகிறான். மிகவும் சந்தோசமாக நகர்ந்த நாட்களினிடையே திருமணத்தின் நான்காவது மாதத்தில் அப்பெண் கர்ப்பம் தரிக்கிறாள். உரிய முறைப்படி மருத்துவ ஆலோசனைகளை பெற்று மிகவும் ஆசையோடும் கவனத்தோடும் கர்ப்பத்தை பேணி வந்த அவள் கர்ப்பத்தின் 10 ஆவது மாதத்தில் சுகப் பிரசவமாக ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 

குழந்தையிலும் தாயிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாததாதல் இருவரும் பிரசவ அறையிலிருந்து விடுதிக்கு மாற்றப்பட்டனர். தா சுகதேகியாகவே காணப்பட்டாள். சிறுவர் நலன் பிரிவு வைத்தியர் பரிசோதித்த பின்னர் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மறுநாள் வீடு செல்ல முடியும் எனவும் வைத்தியர் கூறிச் சென்றார்.

10 மாதம் காத்திருந்து பெற்றெடுத்த குழந்தை கையில் கிடைத்த சந்தோசத்தையும் உறவினர்கள் நண்பர்கள், குழந்தையைப் பார்த்துவிட்டு அழகான குழந்தை, அதிர்ஷ்டக்காரி எனக் கூறியதைக் கேட்டு சந்தோசத்தையும் தன் கணவனோடு  பகிர்ந்து கொண்ட அவ் இளம் தா, குழந்தைக்குள் மறைந்திருக்கும் ஆபத்தை அறிந்திருக்கவில்லை.
மறுநாள் காலையில் வைத்தியர் குழந்தையை பரிசோதிக்க வந்தவேளை குழந்தை மலம் சலம்  கழித்ததா? எனக் கேட்டார். குழந்தை பலமுறை சிறுநீர் கழித்ததாகவும் மலம் கழிக்கவில்லை என்றும் தா கூறிய போது குழந்தையின் வயிற்றைப் பரிசோதித்த வைத்தியர் வயிறு வீக்கமடைந்திருப்பதாகவும் இப்போது வீடு செல்ல முடியாது என்றும் கூறிச் சென்றார். இதனைக் கேட்ட அத்தா சற்றுக் குழப்பமடைந்ததோடு குழந்தை மலம் கழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

சில மணி நேரத்தில் குழந்தையின் சுறுசுறுப்பு குறைவடைந்து குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்தது. குழந்தை பால் குடிப்பதற்கு மறுத்தது. வயிறு மேலும் வீக்கமடைந்தது. தா மிகவும் குழப்பமடைந்தாள். வைத்தியர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஆனால் குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே சென்றது. பிற்பகல் வேளையில் குழந்தை பச்சை நிறத்தில் வாந்தி  எடுக்க ஆரம்பித்தது. விசேட சிறுவர் நல வைத்திய நிபுணர் குழந்தையைப் பரிசோதித்தார். குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது Hirschprungs disease  ஆக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும்  மேலதிக பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் கொழும்பு Lady Ridgway வைத்தியசாலைக்கு இடமாற்றம் செயப் போவதாகவும் தாயை தயாராகுமாறும் வைத்தியர்கள் கூறிச் சென்றனர்.

இளம் வயதான அத்தாக்கு என்ன செவதென்றே புரியவில்லை. தலை சுற்றியது. உடல் விறைத்து விட்டது போல்  இருந்தது. உடுத்திருந்த உடையோடு இருந்த சில பொருட்களை சுருட்டி எடுத்துக் கொண்டு குழந்தையோடு தயாரான போது அம்பியூலன்ஸ் வண்டி கொழும்பு நோக்கி பயணமானது. பல கருவிகளோடு குழந்தை இணைக்கப்பட்டிருந்த போதும் குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே சென்றது. வழி நெடுகிலும் குழந்தை பலமுறை வாந்தியெடுத்தது.

Lady Ridgway வைத்தியசாலையை அடைந்ததும்  அங்கிருந்த வைத்தியர்கள் மிக வேகமாக செயற்பட்டனர்.  குழந்தையை மேலும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்திய அவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இச்சத்திர சிகிச்சையின்போது குழந்தையின் பெருங்குடலானது வெட்டப்பட்டு வயிற்றுப் பகுதியில் இணைக்கப்படவுள்ளதாகவும் (Colostomy)  இதனால்  குழந்தையின் மலம் வயிற்றினூடாகவே வெளியேறும் என்றும் மலத்தை சேகரித்து அகற்றுவதற்கு ஒரு பொலித்தீன் பையை வயிற்றுப் பகுதியில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறிய வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு சம்மதமானால் கையொப்பமிடுமாறும் வேண்டிக் கொண்டனர். 

செவதறியாது திகைத்து நின்ற அத்தா அழுது கொண்டே கையொப்பமிட்டாள்.
மிக நீண்ட நேர சத்திர சிகிச்சையின் பின் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டு சில நாட்கள் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பின் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் வலது வயிற்றுப்புற மேற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட துளையினூடாக மலம் வெளியேறியது. குழந்தை படிப்படியாக  முன்னேற்றமடைந்தது. சீராக பாலருந்த ஆரம்பித்தது. அழுகை குறைவடைந்து சுறுசுறுப்பு ஏற்பட்டது. பெற்றோர் சந்தோசமடைந்தனர். 

சில வாரங்களின் பின் இழையவியல் (Histology report)  பரிசோதனை முடிவானது குழந்தைக்கு ஏற்பட்டது Hirschprungs diseaseஎன்பதை உறுதி செதது. Hirschprungs disease ஆனது மிகவும் அரிதான ஓர் நோ. இந்நோ எமது குடலில் காணப்படும்  நரம்பு மண்டலத்தில் ஏற்படும்  குறைபாட்டால் ஏற்படுகிறது.  எமது உணவுக் கால்வாத் தொகுதியானது வாயில் ஆரம்பித்து தொண்டை, களம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் நேர்குடல் எனத் தொடர்ந்து குதத்தில் முடிவடைகிறது. இவற்றில் வா, தொண்டை மற்றும் குதம் ஆகியவை மட்டுமே எமது விருப்பத்தில் இயங்கக் கூடியவையாகும். ஏனைய குடல் பகுதிகளை எமது விருப்பத்தால் கட்டுப்படுத்த முடியாது. அவை எமது மூளையிலிருந்து வரும் தன்னியக்க நரம்புகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.  (Autonomic nervous System) இந் நரம்புகள் மூலம் மூளையிலிருந்து வரும் செதிகளின் அடிப்படையிலேயே குடல் பகுதியில் சுற்றுச் சுருங்கல் அசைவுகள் ஏற்படுத்தப்பட்டு உணவு ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு கடத்தப்படுகிறது. அத்தோடு சமிபாட்டிற்குத் தேவையான நொதியங்கள் சுரத்தல், சமிபாடு நடைபெறுதல், சமிபாடடைந்த உணவுக் கூறுகள் இரத்தத்தினுள் அகத்துறிஞ்சப்படுதல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் (எமது விருப்பத்திற்கப்பால்)  இத் தன்னாட்சி நரம்புகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. எமது குடல் பகுதியில் நரம்பு மண்டல இரண்டு படைகளால் ஆன வலைப்பின்னலாக அமைந்து  காணப்படுகிறது.

கருவானது குழந்தையாக உருவாகும் போது பெருங்குடலின் இறுதிப்பகுதியில் இந்நரம்பு மண்டலம் (Myenteric Plexuses) தோற்றம் பெறுவதற்கு தவறி விடுவதனாலேயே இந்நோ ஏற்படுகிறது. இதனால் பெருங்குடல் பகுதி சுருங்கி விடுவதற்கு முடியாமல் போவதனால் சமிபாடடையாத உணவுக் கூறுகள்  (மலம்) குடல் பகுதியில் தேக்கமடைகிறது (Mechanic Obstruction). இதனால் வயிறு வீக்கமடைவதோடு கடுமையான வயிற்று வலி ஏற்படும். தேக்கமடையும் மலத்தை குதத்தினூடாக வெளியேற்ற முடியாதது போவதனால் படிப்படியாக தேக்கமடையும் மலம் சிறுகுடல், இரைப்பை என்று எதிர்ப்புறமாக செறிவடைந்து வாந்தியாக வெளியேறும். இவ் இக்கட்டான நிலையில் குடல் புண் ஏற்படுதல், நுண்ணங்கித் தாக்கம், வாந்தி சுவாசப் பைக்குள் செல்லுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மரணம் ஏற்படலாம்.
இதனைத் தடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் போது பெருங்குடல் பகுதியானது வெட்டப்பட்டு வயிற்றுப் பகுதியில் ஏற்படுத்தப்படும் துளையூடாக இணைக்கப்படும். இதனூடாக மலம் வெளியேறும். இதனை ஒரு பையிலே (Colostomy bag) சேகரித்து மலத்தை அகற்றி விட்டு மீண்டும் அப்பையை இணைத்துக் கொள்ள முடியும். இது மிகவும் சிரமமான  காரியமாக  இருந்த போதிலும் இது நிரந்தரமானது அல்ல. குழந்தை வளர்ந்ததும் குறிப்பிட்ட ஓர் வயதை நிறையை அடைந்ததும்  மீண்டும் ஓர் பாரிய சத்திர சிகிச்சை செயப்படும். இதன் போது நரம்பு மண்டலம் அற்ற பெருங்குடல் பகுதி முற்றாக  அகற்றப்பட்டு ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த முனையானது குதத்தோடு இணைக்கப்படும். இதனால் இரண்டாவது சத்திர சிகிச்சையின் பின்னர் (ஏனையவர்களைப் போன்று) குதத்தினூடாக மலம் கழிக்க முடியும். ஆனால் பெருங்குடல் அகற்றப்பட்டதனால் நீரை  அகத்துறிஞ்ச  முடியாமல் வாழ்நாள் முழுவதும் திரவமாகவே  மலம் கழிக்கப்படும். (சுகதேகி ஒருவரில் பெருங்குடலின் தொழிற்பாடு காரணமாக நீர் அகத்துறிஞ்சப்படுவதனாலேயே  நாம் திண்மமாக மலம் கழிக்கின்றோம். வயிற்றுப் போக்கு ஏற்படும் போது (Diarrhoea) நுண்ணங்கி தற்காலிகமாக பெருங்குடலின் தொழிற்பாடுகளை பாதிப்பதால் திரவமாக மலம் கழிக்கப்படுகிறது)
இவ்வாறு எமது உடலில் உள்ள ஒரு சிறிய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு விட்டால் இவ்வளவு பாரிய பிரச்சினைகளை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றால் எம் உடல் முழுவதும் சீராக இயங்குவதற்கு காரணமான இறைவனுக்கு நாம் எவ்வளவு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்பதனை சிந்திக்கத் தவறமாட்டீர்கள் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll