சனி, 22 செப்டம்பர், 2012

இச்சைகள் எல்லை மீறக் கூடாது


ஏ.ஆர்.எம்.ஜிப்ரி (Med),
அதிபர், ஜீலான் மத்திய கல்லூரி, 
 பாணந்துறை

இன்றைய உலகில் மனிதனின் அறிவியல் ஆற்றலின் வளர்ச்சியும் ஒழுக்க விழுமியப் பண்புகளின் வீழ்ச்சியும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாகச் செல்வதைக் காணலாம். ஒரு சாரார் அறிவியல் புரட்சியில் செல்வாக்குச் செலுத்தும் இக்கால கட்டத்தில் மற்றுமொரு சாரார் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மனிதனின் நேர்மையும் நேயமும் ஒரு பக்கத்தில் இருக்கும் போது மறுபக்கத்தில் பொயும் புரட்டும் ஊழலும் லஞ்சமும் மதுவும் மாதுவும் என சிலர் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மறைப்பாங்கான வழிகளில் செல்வோரை நேர் வழிப்படுத்துவது நம் ஒவ்வொருவோர் மீதும் பொறுப்பாகவிருக்கிறது.

அல்லாஹுத்தஆலா நாயன் தன் அருள் மறையிலே இப்படிக் கூறுகிறான். ஆத்மாவின் மீதும்; அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்; அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக.  எவன்(பாவங்களை விட்டும் விலகிக் கொண்டானோ) அவன் நிச்சயமாக சித்தியடைந்து விட்டான்.  எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்\"(91:7-10)

மனிதனை நேர் வழியில் செல்லாமல் தடுப்பதற்கான எத்தனையோ தடைகளை ஷைத்தான் இம்மையிலே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனது வழி கேட்டில் சென்று கொண்டிருப்போரின் ஈருலக வாழ்வுமே இருள் சூழ்ந்ததாகிவிடுகிறது.

எல்லை மீறிய இச்சைகளின் வெளிப்பாடுதான்  பெரும் பாவங்களில் ஒன்றான விபச்சாரம். இதற்கு இஸ்லாம் வரையறை செயப்பட்ட கட்டாயத் தண்டனைகளை வகுத்துள்ளது. திருமணமாகாதவர் இதனைப் புரிந்தால் 100 கசையடிகளும் திருமணமானவர் புரிந்தால் கல்லெறிந்து கொல்லுவதுமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதனைவிட மறுமையிலும் தண்டனைகள் காத்திருக்கின்றன. மேலும் இம்மையில் பல்வேறுவிதமான நோகளையும் அல்லாஹுத்தாலா ஏவி விடுகிறான். அவனே அருள் மறையில் இப்படிக் கூறுகிறான். 

மனோ இச்சையைப் பின்பற்றாதீர். (பின்பற்றினால் அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தவறி விடும்படி செயும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறுகிறார்களோ அவர்கள் கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவதன் காரணமாக அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனை உண்டு. (38:26)

உலகெங்கும் உள்ள நாடுகளில் சுமார் ஐம்பது மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதனின் பல வகைப்பட்ட பாலியல் நடத்தைகள் மூலமாகவே இது உண்டாகிறது. பொதுவாக இலங்கையில் கோணோரியா (Gonorrhoea) சிபிலிசு (syphyilis) ஹேர்பீஸ்(Herpes கிளமிடியா (Clamydia)) பாலுறுப்பு உண்ணிகள், சிறுநீர்வழி அழர்ச்சி, எயிட்ஸ் முதலிய பாலியல் தொற்று நோகள் காணப்படுகின்றன. 

இந்நோகள் சிலவற்றின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தென்படலாம். அல்லது உடலுக்குள்ளேயே இருந்து காலப் போக்கில் வெளிக்காட்டப்படலாம். கர்ப்பிணிப் பெண்களில் இவ்வாறான நோகள் ஏற்படும் போது கிடைக்கும் குழந்தைகளி லும் பல்வேறு விதமான பாதிப்புகள் நிகழ்ந்து விடலாம். கருச்சிதைவு, இறந்து பிறத்தல், அங்கக் குறைபாடு, மெதுவான மூளை வளர்ச்சி போன்றன இவற்றுள் சிலவாகும். இவற்றை விட எயிட்ஸ் நோயும் தொற்றிக் கொள்ளலாம். 

முதன் முதலில் 1981இல் ஐக்கிய அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம் நோயாளர்கள் சிலரில் எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் இனங் காணப்பட்டன. 1983 இல் பிரான்ஸைச் சேர்ந்த லூக்மொண்டிக்கயர் அமெரிக்கரான றெபேர்ட் கலோ ஆகிய விஞ்ஞானிகளே ஏஐங வைரசை முதன் முதலில் இனங்கண்டனர். ஏதட்ச்ண ஐட்ட்தணணி ஈஞுஞூடிஞிடிச்ணஞிதூ ஙடிணூதண்  (மானுட நிர்ப்பீடண குறைபாட்டு வைரஸ்) என்ற பெயரைச் சூட்டியவர்களும் இவ் விஞ்ஞானிகளே ஆவர். இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1986 இல் இனங்காணப்பட்டார். அதன் பின்பு சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் இனங்காணப்பட்டனர். 

ஏஐங தொற்றைப் பூரணமாகக் குணப்படுத்தத்தக்க எந்த மருந்தும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் அது  தொடர்பான ஆராச்சிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இன்றைய மருத்துவத்துறைக்கு இது பெரும் சவாலாகும். இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து விடுபட மனிதன் தன் மன இச்சைகளைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ வேண்டும். இதனை இஸ்லாம் எப்போதும் வலியுறுத்தியே வருகிறது. 

உலகில் வாழும் எயிட்ஸ் நோயாளிகளின் பட்டியலில் இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலும் விலகியே காணப்படுகின்றன. இஸ்லாமிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வோர் ஒருபோதும் இதற்குள் சிக்கி விடமாட்டார்கள்.

இஸ்லாம் மனித இச்சைகளை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தி பிரமச்சாரியத்தை ஆதரிக்கும் மார்க்கமல்ல. இச்சைகளை முறைப்படி நிவர்த்தி செது கொள்வதற்கான வழிவகைகளை தெட்டத் தெளிவாக வரையறை செதுள்ளது. ஆண்களும் பெண்களும் உரிய வயதில் விவாகம் செது கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. விவாகத்தை ஒரு சுன்னத்தான வணக்கமாகவே ஆக்கியுள்ளது. சில நிபந்தனைகளுடன் பலதார மணத்துக்கும் அனுமதியளித்துள்ளது. இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தக்வா, ஸுஹ்த், கவ்ப், வரஃ போன்ற பல ஆன்மிகப் பண்புகளையும் காட்டித் தந்துள்ளது. எல்லா ஆசைகளையும் அபரிமிதமாக்கி மனித சிந்தனையை திசை திருப்பாமலிருக்க இறை சிந்தனையை வணக்க வழிபாடுகளை வகுத்துத் தந்துள்ளது. 

உணர்ச்சியைத் தூண்டும் இசை, ஆபாசத் திரைப்படங்கள், விரசம் நிறைந்த ஆடல்கள், பாடல்கள் போன்றவை சீர்கேடுகளுக்கான பிரதான காரணிகளாகின்றன. கட்டுப்பாடற்ற ஆண், பெண் தொடர்பாடல்கள், ஒன்றுகூடல்கள் போன்றவையும் வரம்பு மீறிய வாழ்க்கைக்கு வழிவகுக்கின்றன. இவை அனைத்தும் எல்லையற்ற இச்சையை ஏற்படுத்தி விடுகின்றன. இஸ்லாத்தில்  இத் தீய செயற்பாடுகளுக்கு இடமில்லை. ஆபாச உலகிலும் நெறிபிறழாது வாழ்வாங்கு வாழ்வதற்கான மனோபக்குவத்தை இஸ்லாமிய நெறிமுறைகள் ஏற்படுத்துகின்றன. இதனை ஏற்று நடந்து ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவோமாக.
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll