சனி, 17 நவம்பர், 2012

அழிவிலிருந்து எழுந்த நகரம்


ஜெர்மனி என்ற நாட்டின் பெயர் கூறியவுடன் எவர் நினைவிலும் நிழலாடும் நகரம் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின். நெருப்பில் வீழ்ந்தாலும் உயிர் பிழைக்கக்கூடிய பறவை என்று கற்பனையாகக் கூறும் பீனிக்ஸ் பறவை போல் இரண்டாவது உலகப் பெரும்போரில் குண்டு மழைகளில் நனைந்த நகரம் என்று ஒரு நகரைக் கூறவேண்டுமானால் பெர்லின் நகரைத்தான் கூறவேண்டும்.
அணுகுண்டு மனித உயிர்களுக்கு எவ்வளவு அழிவைப் போருக்குப் பின் ஐம்பது அறுபது ஆண்டுகள் கடந்த பின்னும் அழியாத கோலமாக அவல நிலையை உருவாக்கும் என்பதற்கு வாழும் நினைவு சின்ன நகரங்களில் பெர்லினும் ஒன்று.
பெர்லின் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. பழமை மட்டுமல்லாது அதன் வரலாற்றில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு முதலே அதாவது இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னமேயே பெர்லினைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பதிவாகி இருந்தபோதிலும் அது ஜெர்மனியப் பேரரசின் மாமன்னராக விளங்கிய பிரெடெரிக் வில்லியம் எனும் பேரரசின் ஆட்சிக் காலம் முதலேதான் தலைநகரமாய் விளங்கியது. அதன் பிறகு பெர்லின் நகரம் ஜெர்மன் பேரரசு, வெய்மர் குடியரசு ஆகியவற்றின் தலைநகரமாகவும் விளங்கினாலும் ஹிட்லரின் மூன்றாம் ரெய்ச் என்னும் பெயருடைய நாட்டின் தலைநகராக விளங்கியது.
உலகிலேயே ஒரு பெருஞ்சுவர் வைக்கப்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்ட நகரம் ஜெர்மனிதான். இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின் ஜெர்மனி மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என்று இரண்டு நாடுகளாயிற்று. இரண்டுக்கும் தலைநகர் பெர்லின். ஒரே நாட்டு மக்கள் 1947 க்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகள் ஆனதுபோல் ஒரே இன மக்கள், அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கைகள் சுவரினால் பிரிக்கப்பட்டார்கள்.

1996 ஆம் ஆண்டு பிரிந்த இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்த அதிசயம் நிகழ்ந்தது. பெர்லினைக் கிழக்கு, மேற்கு பெர்லினாகப் பிரித்த சுவர் இடிந்தது. ஜெர்மானியக் குடிஅரசின் தலைநகரமாக மீண்டும் ஆயிற்று. பிரித்த சுவரின் கற்கள் இன்று பல வீடுகளில் நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.
இன்றைய பெர்லின் ஐரோப்பியக் கண்டத்தின் கலை, இலக்கியத்தில் மட்டுமில்லை, பொருளாதாரத்திலும் முதன்மைப் பங்கு வகிக்கிறது. ஜெர்மனி நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது. உலகப் பொருளாதார சந்தையில் அதன் நாடித் துடிப்பு விளங்குகிறது. பெர்லினில் சுமார் நாற்பது இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
உலகின் புகழ்மிக்க நகரங்கள் ஏதேனும் நதிக்கரையில் அமைந்துள்ளது போல் பெர்லினும் ஸ்பிரி எனும் நதியின் கரையில் அமைந்துள்ளது. பழமையும், புதுமையும் இணைந்த ஜெர்மனியில் காணவேண்டிய கலைச் சிறப்புடைய கட்டிடங்கள் நினைவுச் சின்னங்கள் அந்நாட்டின் கலைப் பெருமையையும் வரலாற்றையும் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll