சனி, 22 செப்டம்பர், 2012

இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படம் உலகெங்கும் கொதித்தெழுந்த முஸ்லீம்கள்


செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி. அவ்வளவு சீக்கிரம் இதனை யாரும் மறந்து விட முடியாது. அது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி. இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்வதானால் அமெரிக்காவின் துக்கமான நாள் என்று கூட சொல்லலாம். 
ஆம், இன்றைய தினம்  செப்டம்பர் 11 தான். யாரும் அதனை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. வழமையான கலவரங்கள் கூட குறைவாக பதிவாகிக் கொண்டிருந்த மத்திய கிழக்கில் திடீரென ஆர்ப்பாட்டங்கள். யார் ஏற்பாடு செய்தார்கள்? எதற்காக ஒழுங்குபடுத்தினார்கள்? என்பதையெல்லாம் அறிவதற்குள் பாரிய  சேதங்கள். கூடவே சில உயிர்களையும் குடித்து விட்டது. 

எகிப்து மற்றும் லிபியா, இவை இரண்டும் அரபு வசந்தத்தின் தென்றலை அனுபவித்து வரும் நாடுகள். இவை இரண்டு நாடுகளிலும் தான் ஆர்ப்பாட்டம் தீவிரமாய் ஆரம்பித்தன. வழமையாக லிபியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய தேர்ந்தெடுக்கும் பெங்காஸி நகரில் தான் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆனாலும் இம்முறை ஆர்ப்பாட்டம் செய்த குறித்த இடம் பாதுகாப்பு பிரதேசத்துக்குட்பட்டது. நூற்றுக் கணக்கானவர்கள் ஏவுகணைகள், கைக்குண்டுகள், துப்பாக்கிகள் சகிதம் பெங்காஸியில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உணர்வுகள் உச்சத்தைத் தொட கையிலிருந்த கைக்குண்டுகளும், ஏவுகணைகளும் துப்பாக்கிகளும் தூதரக வளாகத்தைப் பதம்பார்த்தன. கம்பத்தில் சோகமாக பறந்து கொண்டிருந்த அமெரிக்க கொடி கீழிறக்கப்பட்டு கிழித்து தீயிட்டு கொளுத்தப்பட்டது. 

தூதரகம் தீயில் கருகியது. இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து தூதரகத்தை தீயிலிருந்து மீட்பதற்குள் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்டீபன் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் 4 பேர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் உணர்வுகளுக்கு தமது உயிரைப் பலிகொடுத்தனர். 

இது இவ்வாறிருக்க குறித்த அதே நேரத்தில் எகிப்திலும் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அமெரிக்க தூதரக வளாகம் இம்முறை தஹ்ரீர் சதுக்கம் செய்யும் பணியினை செய்தது என்றால் கூட பிழையிருக்காது.  அரைக் கம்பத்தில் சோகையிழந்து அசைந்து கொண்டிருந்த அமெரிக்க தேசியக் கொடிக்கு பதிலாக கறுப்புக் நிற கொடி ஏற்றப்பட்டு அ@மரிக்க தேசிய கொடி தீயில் போடப்பட்டது. 

உடனடியாக உஷாரானது எகிப்திய காவல்துறை. கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுத்து நிறுத்தி தூதுவர் உள்ளிட்டோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். 

ஏன் எதற்கு இந்த கொலைவெறிப் போராட்டம்? ஒருவரின் உணர்வுகளோடு விளையாடும்  போது இப்படித்தான் வெளிப்பாடுகள் இருக்கும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்)  அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராகவே இத்தனை ஆர்ப்பாட்டங்கள். 

முஹம்மத் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தும் இவ்வாறான திரைப்படங்களும் கேலிச்சித்திரங்களும் ஒன்றும் புதிதல்ல. எனினும் காத்திரமான நடவடிக்கைகள் இல்லாததால் இவ்வாறான இழிவான நடவடிக்கைகள் முஸ்லிம்களை துரத்திய வண்ணமுள்ளன. 

உண்மையில் இத்திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வியும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பான சந்தேகமும் இருக்குமல்லவா? இஸ்லாத்துக்கெதிரான குறித்த திரைப்படம் தொடர்பில் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம்.

55 வயதான இஸ்ரேலிய அடிப்படையைக் கொண்ட தலைவர் நகவ்லா பாசிலி நகவ்லா. இவர் தான் இப்படத்தினுடைய தயாரிப்பாளர். இத்திரைப்படத்தினை தயாரிக்க அவருக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது. இந்த நிதித் தொகையானது சுமார் 100 இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து திரட்டப்பட்டிருப்பதாக மிக நம்பகரமான வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் சாம் பாசிலி இஸ்லாம் ஒரு புற்றுநோய் இதனை வளரவிடக்கூடாது என கூறிய வார்த்தைகளும் ஊடகங்களில் பதிவாகியிருந்தது. 

2011 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தயாரான இந்த இரு மணித்தியாலங்கள் நீண்ட திரைப்படம் முஸ்லிம்கள் மனதை வெகுவாக புண்படுத்தியுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸில் செரிடோஸில் வசிக்கும் இவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏ.எப்.பி.சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. காசோலை மோசடி வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து விடுதலையான இந்த பாசிலி பாலைவன போர் வீரன் (ஈஞுண்ஞுணூt ஙிச்ணூணூடிணிணூ) என்ற ஒரு திரைப்படத்தை எடுப்பதாகக் கூறியே இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார். 

முஸ்லிமின் அப்பாவித்தனம் (ஐணணணிஞிஞுணஞிஞு  Oஞூ Mதண்டூடிட்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அவமதிப்புத் திரைப்படத்தை இயக்கியவர் பிரபல ஹொலிவூட் இயக்குனரான எலன் ரொபர்ட்ஸ். எனினும் பாலைவன போர் வீரன் (ஈஞுண்ஞுணூt ஙிச்ணூணூடிணிணூ) என்ற படத்தின் இயக்குனராகவே இவரது பெயர் பதிவாகியுள்ளது. 

எனினும் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தாம் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்னரான போர் வீரனின் கதை என்று கூறி தங்களை இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் இது மத நிந்தனைகளைக் குறித்தான படம் என்பது தமக்குத் தெரியாது எனவும் நடிப்புக்குப் பின்னர் கதாப்பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் போன்றன மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அங்கலாய்க்கின்றனர். 
அனா குர்ஜி இத்திரைப்படத்தில் முக்கிய கதாநாயகி. ஜோர்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளம் மனைவியாக நடித்துள்ளார் இவர். இந்த ஜோர்ஜ் என்ற பாத்திரமே பின்னர் முஹம்மத் என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொலிஸாரிடம் கூறியுள்ள குர்ஜிக்கு இத்திரைப்படத்தில் நடிக்க கொடுக்கப்பட்ட சம்பளம் நாளொன்றுக்கு 75 டொலர்கள். இவை தான் நடந்தவை. அடிதடி மசாலா படமாக விளக்கம் கொடுக்கப்பட்டு பின்னர் நடித்தவர்களுக்கே தெரியாமல் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையானது இஸ்லாத்துக்கெதிராக மிகத்திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு செயற்பாடே. 

முஸ்லிம்கள் இத்திரைப்படம் குறித்து விழித்துக் கொள்ள அல்லது போராட்டங்களை முன்னெடுக்க அவர்களது உணர்வினை தூண்டியது குறிப்பாக யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக இணையத்தளங்களில் ‘கூடஞு கீஞுச்டூ ஃடிஞூஞு Oஞூ Mதடச்ட்ட்ஞுஞீ, Mதடச்ட்ட்ஞுஞீ Mணிதிடிஞு’  என்ற பெயர்களில் வெளியான 14 நிமிட முன்னோட்டங்க@ள (கூணூச்டிடூஞுணூண்).

ஜூலை மாதம் சாம் பாசிலி என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள. குறித்த முன்னோட்டத்தை சுமார் 450,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.  அத்துடன் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி குறித்த அதே பயனரினால் அதன் அரபு வடிவம் உள்ளிட்ட மேலும் சில முன்னோட்டங்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இதனையும் பார்வையிட்டுள்ளனர். குறித்த முன்னோட்டங்களிலேயே நபியையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும். அத்துடன் மொரிஷ் Œ@டக் எனும் அமெரிக்க வாழ் எகிதியர் இந்த முன்@னாட்டங்களை தனது ‘ஆடூணிஞ்ஞுணூ’ இல் வெளியிட்டதையடுத்து ஆர்ப்பாட்டங்கள் @மலும் தீவிரமடைந்தன.    

போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்தும் இடம் பெற்றுவரும் நிலையில் குறித்த முன்னோட்டங்களை தனது பக்கங்களிலிருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளமை கவலைக்குரியதே. 

 திரைப்படத்தை பொறுத்தவரை கேவலமான காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு மேலதிகமாக, 2010  ஆம் ஆண்டு குர்ஆன் பிரதிகளை எரிக்க அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாரான டெரி  ஜோன்ஸின்  கருத்துக்களை நியாயப்படுத்தும்  காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த திரைப்படத்தை விட எகிப்து தேவாலயமொன்றில் காண்பிக்கப்பட்ட “குருடனாக இருந்தேன் விழித்துக் கொண்டேன்” என்ற  அல்குர்ஆனையும் நபியையும் இழிவுபடுத்தும் நாடகமொன்றுக்கு எதிராகவும் எகிப்தியர்கள்  போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உலகளவில் இன்று தொடரும் ஆர்ப்பாட்டங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இத்திரைப்படத்தை வன்மையாக  கண்டித்துள்ளதுடன் இவ்வாறான திரைப்படங்களின் பின்னணியில் இரத்தக் களறியை தூண்டும் இனவாதிகள் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
லிபியாவின் பெங்காஸி நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு தமது உயிரை இழந்த அமெரிக்கத் தூதுவரின் இழப்புக்கு  பின்னால் அமெரிக்காவும் இது விடயத்தில் விழித்துக் கொண்டதெனலாம். வெள்ளை மாளிகை பேச்சாளர் குறித்த மத நிந்தனையை திரைப்படக் குழுவினர் மீது சுமத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படு வருவதாக தெரிவித்ததிலிருந்து அதனை உறுதிப்படுத்த முடிகிறது.

இதற்கு மேலதிகமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லிபியாவின் கடற் பிராந்தியத்துக்கு 2 போர்க் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளார். மத்திய கிழக்கு பிரதேசத்தில் நிலை  கொண்டுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான 95 கம்பனிகளிலிருந்தே விசேட திறன் கொண்ட இவ்விரு கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கொல்லப்பட்டாரா அல்லது புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் இறந்தாரா என்பதிலும் சர்ச்சை நீடிக்கிறது. எவ்வாறாயினும் இதற்குறிய  பொறுப்பை ஐணணணிஞிஞுணஞிஞு ணிஞூ Mதண்டூடிட் திரைப்படக் குழுவினரே ஏற்க வேண்டும்.

உலக அளவில் லிபியா, எகிப்து, யெமன் என ஆரம்பித்த போராட்டங்கள் சூடான், கட்டார் மொரோக்கோ, அவுஸ்திரேலியா, இந்தியா, சிரியா பலஸ்தீன், மலேசியா என நீண்டு கொண்டே செல்கின்றன.   எமது இலங்கைத் திருநாட்டிலும் போராட்டங்கள் இடம்பெற்றன. இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன நாளையும் இடம்பெறவுள்ளன.

அமெரிக்கத் தூதரகங்களுக்கு  பலத்த பாதுகாப்பு உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கெதிரான போராட்டத்துக்கும் தூதுவராலயங்கள் மீதான தாக்குதலுக்கும் அல் - கைதா அழைப்பு விடுத்துள்ள நிலையில் தூதுவர்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதலை பொறுத்துக் கொள்ளப் போவதில்லையென ஒபாமா  குமுறியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாளைய தினம் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து  பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஷெ#க் யூசுப் அல் கர்ளாவி அழைப்பு  விடுத்துள்ளதுடன் இஸ்லாமிய மத நிந்தனையை முற்றாக ஒழிக்கும் பொருட்டு சர்வதேச சட்டமொன்றின் அவசியத்தை சவூதி அரேபியாவின் பிரபல முப்தியொருவரும் துருக்கியின் பிரதமரான அர்துகானும் வலியுறுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி உணர்வுகளை தூண்டி ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் வித்திட்ட இந்தத்  திரைப்படத்துக்கும் அதன் குழுவினருக்கும் நடவடிக்கை எடுப்பதை விடுத்து மக்களின் உணர்வுகளோடு  விளையாட அமெரிக்கா தயாராவது கவலைக்குரியது.  ஏனெனில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு இதன் பின்னர் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகள் தடுக்கப்பட்டால் மட்டுமே முற்றுகையிடப்பட்ட அமெரிக்கத் தூதரகங்களுக்கும் தூதுவர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க முடியும். அத்துடன் (இத்திரைப்படத்துக்கு எதிராக) காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்  என வலியுறுத்தி எகிப்து ஜனாதிபதி முஹம்மது முர்ஸியும் தனது அமெரிக்க விஜயத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது.

மத நிந்தனை செய்யும் இவ்வாறான திரைப்படங்கள் திரையிடப்படுவதனூடாகவும் அவை தொடர்பில் வெளிப்படுத்தப்படவதனூடாகவும் ஆத்திரம் ஊட்டப்பட்டு 

அமெரிக்காவுக்கெதிரான வெறுப்பும் கொள்கைகளும் வளருமே தவிர முஸ்லிம்களிடத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை ஒருபோதும் உயர்த்தாது என்பது மட்டும் திண்ணம்.

நூற்றாண்டு காணும் மருதமுனை அல்-மனாரின் வரலாற்றுப்பதிவுகள்

1911 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இக் கட்டுரை பிர”ரிக்கப்படுகிறது.
1911 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையானது தனது கல்வி நடவடிக்கைகளை 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்தது. 50 மாணவர்களுடன் தொடங்கிய இப் பாடசாலை 1ம், 2ம் வகுப்புக்களை முதலில் ஆரம்பித்தது. இப் பாடசாலை ஆரம்பத்தில் மருதமுனை அரசினர் ஆண்கள் பாடசாலை என்று  பெயர் பெற்று இடைக் காலங்களில் பல்வேறு பெயர் மாற்றங்களுக்குட்பட்டு தற்போது அல் மனார் மத்திய கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அகில இலங்கை ரீதியாக பிரசித்தி பெற்ற இக்கல்லூரியின் முன்னேற்றத்திற்கு மருதமுனை மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த அதிகம் பேர் இன்று வரை பாடுபட்டு வருகின்றனர்.
அ@த@பான்று இன்று பல்@வறு துறைகளிலும் @தசிய மற்றும் சர்வ@தச ரீதியாக பிரகாசிக்கும் ஆயிரக் கணக்கா@னாரையும் இப் பாடசõலை கடந்த நூறு வருட காலத்தில் உருவாக்கியுள்ளது.
இப்பாடசாலை தொடங்கிய காலந்தொட்டு தமிழ் சகோதரர்களே அதிபர்களாக கடமையாற்றியிருந்தனர். 1949 ஆம் ஆண்டு முதலே இதே கிராமத்தைச் சேர்ந்த அதிபர்கள் கடமையாற்றினர். இப்பாடசாலையின் பதினைந்தாவது அதிபராக 1969 ஆம் ஆண்டு ஏ.எச். முகம்மது அதிபர் அவர்கள் தலைமையாசிரியராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். 
புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் அவர்களின் மூத்த மகன் எம். நயீம் சரிபுத்தீன் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியாக இப்பாடசாலையில் கடமையாற்றினார். இவர் தமிழ்ப்பாடத்தினை கற்பித்ததோடு சில காலம் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார். இவரின் காலத்தில் வி.எம். இஸ்மாயில் ஆசிரியர் அவர்கள் பொதுப் பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்து தமிழையும், வரலாற்றினையும் கற்பித்தார். இதே காலப்பகுதியில் ஏ.எல்.மீராமுகைதீன் ஆசிரியர் அவர்களும் மிகவும் முக்கியமானவராக இருந்தார். கலைப்பட்டதாரியான இவர் பெரும்பாலான பாடங்களை கற்பித்துக் கொண்டிருந்தார். அடுத்த முக்கியமானவராக கே. அல்லாபிச்சை ஆசிரியர்  காணப்பட்டார். இவர் பொதுப் பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்து சமூகக்கல்வி போன்ற பாடங்களை கற்பித்தார்.
1970 களில் நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த மௌலவி ஆசிரியரான அஹமது லெவ்வை இப்றாலெவ்வை ஹாபிஸ் அவர்கள் மிகவும் முக்கியமானவர். சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1991 ஆம் ஆண்டு வரையில் இஸ்லாம் பாடத்தை கற்பித்தார். இக் காலத்தில் ஏ.எம். அபூபக்கர் ஆசிரியர் அவர்களும் முக்கியமானவர். இவர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகும். இதே காலப்பகுதியில் எம்.எஸ்.எம். நளீம் ஆசிரியர் அவர்கள் தமிழ்ப்பாடத்தினைக் கற்பித்துக் கொண்டிருந்தார். மாணவர் சுற்றுலாக்களுக்கும் பொறுப்பாகவும் இருந்தார். பிற்காலத்தில் பிரதி அதிபராககவும் கடமையாற்றினார்.
 எஸ்.இசட். சக்காப் மௌலானா அவர்கள் அல் மனாரைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவர். இவர் எல்லா வகுப்புகளுக்கும் எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும் ஆற்றலுள்ளவராக இருந்தார். பாடசாலை மாணவர் மன்றம், கலை கலாசார நிகழ்வுகள் போன்வற்றிற்கு பெரிதும் உதவினார். பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். இக் காலத்தில் எஸ்.எம். பழீல் அவர்கள் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக கடமை புரிந்தார். பாடசாலையில் தயாரிக்கப்பட்ட எல்லா ஆங்கிலக் கடிதங்களும் இவரின் கையினாலேயே தட்டச்சு செய்யப்பட்டன. அத்துடன் விளையாட்டுத்துறைக்கும் முக்கிய பங்காற்றினார். 
இதே காலப்பகுதியில் ஐ.எல்.ஹபீப் முகம்மது ஆசிரியர் அவர்கள் ஒரு இளைஞராக பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். எஸ்.எம்.எம். மத்தீன் ஆசிரியர்கள் தமிழை ஒரு பாடமாக கற்பித்ததோடு விளையாட்டுக்கு பொறுப்பாக இருந்து சாரணியத்தையும் வளர்த்தார். அடுத்து எஸ்.எம்.எம்.எச். பாரி மௌலானா அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக இருந்து கணித பாடத்தை அனேக வகுப்புக்களுக்கு கற்பித்தார். மேலும் மாணவர் வசதிக்கட்டணத்திற்கும் சஞ்சிகை போன்ற எழுத்தாக்கங்களுக்கும் பொறுப்பாக இருந்தார். 
இதே காலப்பகுதியில் இ. உதுமாலெவ்வை அதிபர் அவர்கள் அல் மனார் மஹா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். ஆரம்பப் பிரிவின் அபிவிருத்திக்கு பெரிதும் பாடுபட்டார். இதே காலப்பகுதியில் எம்.ஏ.எம். ஜெலீல் ஆசிரியர் அவர்கள் தமிழ்ப்பாடத்தை கற்பித்தார்.
அடுத்து காதர் இப்றாஹீம் ஆசிரியர் சமூகக்கல்வியை கற்பித்துக் கொண்டிருந்தார். மேலும் பாடசாலையின் அபிவிருத்திக்கும் பாடுபட்டுக் கொண்டிருந்தார். 
 ஏ.எச்.எம். மஜீட் சேர் அவர்களும், மசூர் மௌலானா அவர்களும் கொழும்பு சென்று அமைச்சர் பதியுதீன் மஹ்மூதை  சந்தித்து மருதமுனை அல்ஹிறா வித்தியாலயத்தை அல்-மனார் மஹா வித்தியாலயத்தடன் இணைத்தனர். இப்பாடசாலை தற்போது அல் மனார் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக செயற்பட்டுவருகின்றது. அத்துடன் விஞ்ஞான வர்த்தக வகுப்புக்களை ஆரம்பிக்கவும், தளபாடங்கள் தாராளமாகப் பெற்றுக் கொள்ளவும் அமைச்சர் உதவினார் என்பது இங்கு குறிப்பிட்டுக்கூறக்கூடிய விடயமாகும். 
1976 ஆம் ஆண்டு ஏ.எச்.எம். மஜீட்  இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றார். 
 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். அமைச்சர் அவர்களின்  உதவியுடன் இப்பாடசாலையில் உயர்தர வகுப்பிற்கான விஞ்ஞான ஆயுவு கூடம் கட்டப்பட்டது. 
மஜீட் அதிபர் பாடசாலையைப் பொறுப்பேற்றதன் பின்னர் பெரும் சவால்கள் காத்திருந்தன. 1975ம் ஆண்டில் பெறுபேறுகள் திருப்தியில்லாததால் பெற்றோர் பாடசாலையின் மீது நம்பிக்கையற்றிருந்தனர். முதலில் அதிபர் அவர்களுக்கு பெற்றோரின் நம்பிக்கையைக்கட்டி எழுப்ப வேண்டிய தேவை நிரம்பியிருந்தது. எனவே 1976ம் ஆண்டின் பெறுபேற்றினை உயர்த்துவதற்காக க.பொ.த.சாதாரண தர மணவர்களுக்கு இரவு நேரங்களின் வகுப்புக்களை ஒழுங்கு செய்து இரவில் மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தினார்.
பெண் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் அவர்களின் மகளான சித்தி நூறு நஜீமா மிகவும் முக்கியமானவர். இவர் மருதமுனையின் முதலாவது மௌலவியா ஆசிரியராவார். இவர் இப் பாடசாலையின் பெண் மாணவிகளின் விஷேட தேவைகளுக்கு பொறுப்பாக இருந்ததோடு இஸ்லாம், அறபு போன்ற பாடங்களை கற்பித்தார். அடுத்ததாக திருமதி ஜரீனா ஆசிரியை மருதமுனையின் முதலாவது ஆசிரியையும் விஞ்ஞான பாடத்திற்கு பெயர் போனவருமாகும். இவர் பெண் மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பாக இருந்தார்.
அ. முகம்மது சஹாப்தீன் ஆசிரியர் அவர்களும் அ. முகம்மது முஸ்தபா ஆசிரியர் அவர்களும் மிகவும் முக்கியமானவர்களாகும். இருவரும் சகோதரர்கள். மூத்த சகோதரர் வர்த்தக பாடத்தினையும் இரண்டாமவர் சமூகக்கல்வி பாடத்தையும் கற்பித்தனர். அடுத்ததாக இளம் ஆசிரியராக எஸ்.எல். ஜலால்தீன் ஆசிரியர் அவர்கள் பாடசாலைக்கு வருகைதந்து விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். இவர் பயிற்றப்பட்ட உடற்கல்வி ஆசிரியராவார். சுகாதாரமும் உடற்கல்வியினையும் கற்பித்தார். 
இதே காலப்பகுதியில் பாண்டிருப்பில் இருந்து வருகை தந்த மூன்று ஆசிரியர்கள் முக்கியமானவர். பிற்காலத்தில் இந்து மஹா வித்தியாலயத்தில் அதிபராக இருந்த திரு. சோமநாதர் பாக்கியநாதன் அவர்கள் விஞ்ஞானக்கல்விக்கு புத்துயிரூட்டியவர். இரண்டாமவர் திரு. பாலசுந்தரம் பொன்னம்பலம் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். இவர் 6 முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பித்தார். மூன்றாமவர் செல்வி. பொன்னம்பலம் ஆசிரியை. இவரும் பாண்டிருப்பைச் சேர்ந்தவர். இவர் விஞ்ஞானம் மற்றும் மனையியல் பாடங்களை கற்பித்தார்.
ஏ.எம். முசாதீக் ஆசிரியர் கணித பாடத்தில் பயிற்றப்பட்டவர். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாகவும் கணிதக்கழகத்திற்கு பொறுப்பாகவும் இருந்தார். இவரும் இளவயதில் காலமானார். இதே காலப்பகுதியில் ஏ. அலாவுத்தீன் அவர்கள் பயிற்றப்பட்ட கைவினை ஆசிரியராவார். இவர் பாடசாலையின் தமிழ் தின நிகழ்வுகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பாக இருந்தார். இதே காலப்பகுதியில் ஏ.எம். அப்துல்லா ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக கடமையாற்றினார். இவர் சமூகக்கல்வி பாடத்தினை கற்பித்தார். எஸ்.எம். மூசா ஆசிரியர் அவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவிற்கு இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் போன்ற பாடங்களைக் கற்பித்தார். இவர்களுடன் எம்.பி. முகைதீன் ஆசிரியர் அவர்கள் பயிற்றப்பட்ட பொது ஆசிரியராக இப்பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருந்தார்.  
பாடசாலை அதிபர் என்ற பொறுப்புக்கு மேலாக மஜீட் அதிபர் அவர்கள் பாடசாலை முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டுக் கொண்டிருந்தார். இதுவரை காலமும் பின்னேரங்களில் இரண்டு மணிக்கு பூட்டப்பட்ட பாடசாலைக் கலாசாரத்தை இரவு பத்து மணிவரை திறந்து வைப்பதற்கான ஏற்பாட்டினை செய்ததோடு விரும்பிய நேரம் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து போவதற்கான பழக்கத்தையும் ஏற்படுத்தினார். பொதுப் பரீட்சைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாராந்த, மாதாந்த பரீட்சைகளை நடாத்த ஏற்பாடு செய்தார். அக் காலத்தில் கணணி வசதி இல்லாததால் அதிபர் அவர்களே வினாப் பத்திரங்களை இரவு முழுவதும் இருந்து தட்டச்சு செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்தார்.
எனவே தொகுத்து நோக்கும் போது மருதமுனைக் கிராமத்தின் கல்வி மேம்பாட்டிலும் சமய கலாச்சார முன்னேற்றத்திலும், எதிர்கால சந்ததியினரின் சிறப்பானதும் ஒளிமயமானதுமான எதிர்காலத்திற்கு எமது மாணவச் செல்வங்களின் ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் பண்பாட்டு விருத்திக்கும் மஜீட் அதிபர் அவர்கள் பாடுபட்டார் என்பதை குறிப்பிட்டுக்கூறலாம். இவரின் சேவைகள் பாராட்டப்பட வேண்டியதும் பாடசாலை வரலாற்றுப் பதிவேடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதுமாகும்.

- எம்.எம். நெபளல்SLPS, SLAS
மருதமுனை.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பெண்கள் தோற்றத்தில் பூக்கள் பூக்கும் அதிசய மரம்


ஆண்களுக்குத் தான் மட்டும் தானா பெண்கள் மீது ஆசை? ஏன் மரத்துக்கும் ஆசை என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்களா?

நாளுக்கு நாள் அதிசயங்களும் ஆச்சரியங்களும் உலகில் எங்கேயாவது ஒரு மூளையில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை நம்புவதா? அல்லது நம்பாமல் விடுவதா என்ற பல்வேறு விதமான தெளிவின்மையில் நாங்கள் இருந்தாலும்.

அந்த விடயம் தொடர்பான உரிய ஆதாரங்களை உடனுக்குடன் காட்டும் போது நம்பித்தானே ஆக வேண்டும். அந்த இடத்திற்குச் சென்று அதனை கானோளியாக எடுத்து உங்களுக்கு காண்பிக்கும் போது உங்கள் பதிலை நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.


Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன.


அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது.

உண்மையை உறுதிப்படுத்த இந்த கானோளியைப் பாருங்கள்.........











வியாழன், 4 ஆகஸ்ட், 2011

Google Plus achieved 25 million user at one month

இன்று நாங்கள் இணையத்துடன் இணைந்து கொண்டால் எங்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது பேஸ்புக், டிவிட்டர் என்று இருந்த காலம் மாறப் போகிறது. 

நாங்கள் யாரும் எதிர்பார்க்க ஒரு புதிய சமூகத்தளம் எங்களிடம் வந்துவிட்டது. அதுதான் கூக்கிளின் பிளஸ். இதன் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்க வில்லை உலகத்தில் இந்தளவு எல்லையை அடைந்து விடுமென்று. அண்மையக் கணக்கெடுப்பின் படி 25 மில்லையன் வாசகர்கள் இங்கு இணைந்துள்ளார்கள் என்பதை சொன்னால் மிகையாகாது. 

இந்த வகையில் அண்மையில் மேற்கொண்ட ஆய்விகளின் மூலம் இந்த இலக்கை அடைந்துள்ளதாக பிரபல Comstore நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது சரியாக சொல்லவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் வாசகர்கள் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.  இது இணைய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பேஸ்புக் இந்த இலக்கை அடைய 3 ஆண்டுகளும், டிவிட்டர் 30 மாதங்களும், என இந்த நிறுவனம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. 

கூக்குள் பிளசிக்கு உலகம் தோரும் உள்ள வாசகர்களின் எண்ணிக்கை 


அமெரிக்கா- 6 மில்லியன் வாசகர்கள் 
இந்தியா - 3.6 மில்லியன் 
கனடா(UK) - 1 மில்லியன் 
ஜெர்மனி - 920,000
பிரேசில் - 180,000
பிரான்ஸ் - 500,000
தைவான் - 500,000 



எது எப்படியாக இருந்தாலும் இதுவரைக்கும் இந்த கூக்குள் பிளஸ் பரீட்சார்த்த பதிப்பாக இருப்பதுதான் இன்னும் ஒரு விடயமாகும்.


ஆகவே நீங்களும் இந்த வாசகர்களின் ஒருவராக வர வேண்டுமா உடனடியாக அனுப்புங்க  comment    பண்ணுங்க உங்க மின்னஞ்சலை உங்களுக்கு கூக்குள் பிளஸ் உறவு வரும்!















ஞாயிறு, 22 மே, 2011

Most rare Magic without any thing by Samsudeen from India


எங்கள் வாழ்க்கையில் பல்வேறுபட்ட விதவிதமான நவீன தொழில் நுட்பங்கள் கண்டு நாங்கள் வியந்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எந்த விதமான நவீனமும் இல்லாமல் சாதாரண பாணியில் எங்களுக்கு ஒரு விடயத்தை ஒருவர் செய்து காட்டும் போது எங்களுக்கு பார்க்க வேண்டும் தோனுமல்லவா? இந்தியாவைச் சேர்ந்த சம்சுத்தீன் என்பவரின் விந்தைகளும் விநோனதங்களும் தான் என்ன உங்களையே ஆச்சரியத்தில்  உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாமல் இருக்கும் இந்த வீடியோக்காட்சிகளை நாங்களும் கண்டு கழிக்க என்ன அவகாசம்  சன்ரீடி கமாராக்களின் கண்களில் மண்ணைத்தூவி மந்திர தந்திரங்கள் செய்யும் சம்சுத்தீனின் விந்தைகளை கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைவோம்.  இங்கே கிளிக் பண்ணி பாருங்கள்



செவ்வாய், 10 மே, 2011

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்


பரவலாக எங்கும் வேகமான இணைய இணைப்புகள் இருப்பதால் மென்பொருள்களை CD/DVD மூலம் வாங்குவதை தவிர்த்து இணையத்தில் டவுன்லோட் மூலம் வாங்கி கொள்ளுகிறார்கள். பெரும்பாலும் அவை ISO கோப்பு வடிவில் வருகின்றன. இது போன்று மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 7 இணையத்தில் தரவிறக்கமாக  விற்பனைக்கும் கிடைக்கிறது.

 விண்டோஸ் 7  க்கான நேரடி தரவிறக்க சுட்டிகளை தந்து ஒரு இடுகை இட்டு இருந்தார். பொதுவாக அவற்றை தரவிறக்கி DVD யில் ஏற்றி விண்டோஸ் 7 நிறுவ வேண்டி இருக்கும். விண்டோஸ் 7 Home Basic, Home Premium, Professional, Ultimate என்று பல்வேறு பதிப்புகளில் வருவதால் அதை சோதித்து பார்ப்பவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு DVD வீணாகும்.

இப்போதெல்லாம் பல நெட்புக் கணினிகள் DVD டிரைவுகள் இல்லாமல் வருகின்றன. அவற்றில் விண்டோஸ் 7 நிறுவ எக்ஸ்டெர்னல் DVD  டிரைவ் தேவைப்படும்.

இது போன்ற தருணங்களில் மாற்று வழி USB மூலம் விண்டோஸ் 7 நிறுவுவது. நேரடியாக ISO கோப்பினை USB யில் காப்பி செய்து, உபயோகிக்க முடியாது. USB யை bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை மைக்ரோசாப்ட் அளித்துள்ளது.

Windows 7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இதனை திறக்கும் போது வரும் முதல் விண்டோவில் Browse கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள விண்டோஸ் 7  ISO கோப்பினை கொடுங்கள். 'Next' கிளிக் செய்யுங்கள்.

USB யை டிரைவில் பொருத்தி விட்டு, அடுத்த விண்டோவில் 'USB Device' கிளிக் செய்து கொள்ளுங்கள். குறைந்து பட்சம் 4GB அளவுள்ள USB டிரைவ் உபயோகப்படுத்துங்கள்.


அடுத்த விண்டோவில் USB டிரைவை தேர்ந்தெடுத்து கொள்ளவும். 'Begin Copying' கிளிக் செய்யவும்.

சில நிமிடங்களில் காப்பி செய்து முடித்து விடும். இப்போது உங்கள் விண்டோஸ் 7 இன்ஸ்டாலேஷன் USB தயார்.
கணினியை மீள்துவக்குங்கள் (Reboot). துவங்கும் போது ஆரம்பத்தில் F2 கீ அழுத்தி BIOS Setup க்குள் நுழைந்து கொள்ளுங்கள். அங்கே First Boot Drive என்பதில் USB யை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

F10 ஐ அளித்தி செட்டிங்க்ஸ் சேமித்து கொண்டு மீண்டும் கணினியை துவக்குங்கள். இப்போது உங்கள் கணினி USB மூலம் பூட் ஆகி விண்டோஸ் 7 நிறுவுதல் துவங்கும். 

Rapid Share மற்றும் Premium பல தளங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள

நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.

நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.

www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.

இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.

இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.

Blogroll